இசாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்துக்கு …

இசாலினி மிக நீண்ட காலமாக பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசேட சட்ட மருத்துவ அதிகாரிகள் தலைமையிலான மூவரடங்கிய நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் சமையல் எரிவாயு மூலம் ஏற்பட்ட தீயினால் சிறுமியின் உடல் எரிந்ததாக ரிஷாட் பதியுதீனின் குடும்பத்தினர் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தனர்.

எனினும், சிறுமியின் உடலில் மண்ணெண்ணெய் மணம் வீசியதாக, சிறுமியை வைத்தியசாலைக்கு ஏற்றிச்சென்ற சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியில் கடமையாற்றிய இருவர், சிறுமிக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சிலரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.