“மரணத்திற்கு காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள்” என்று இறப்பதற்கு முன்பு வாக்கு மூலம் கொடுத்துவிட்டுபரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் -மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்ற பயங்கரம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண்ணை வரதட்சனை கொடுமையால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் சசி ஜாதவ். கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி சசியை தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று மூன்று லட்சம் வாங்கி வரும் படி அவரது கணவர் கூறியுள்ளார்.

ஆனால் சசி வரதட்சனை கொடுக்கும் அளவிற்கு எங்கள் வீட்டில் வசதி இல்லை என்று கூறி மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் சசியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் வரதட்சணை கொடுக்காததால் சசியின் கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் மூவரும் ஒன்று சேர்ந்து அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.

ஆசிட் குடித்ததில் அந்த பெண்ணிற்கு உடல்நிலை மோசமானதால் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து 50 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். என் மரணத்திற்கு காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள் என்று இறப்பதற்கு முன்பு சசி வாக்குமூலம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.