இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் வூட் விலகல்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன. முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3வது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி ஹெடிங்லியில் தொடங்குகிறது. 3வது போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் அந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் வூட்.

ஏற்கனவே இந்த தொடரில் ஃபாஸ்ட் பவுலர் ஆர்ச்சர் காயம் காரணமாக ஆடவில்லை. பென் ஸ்டோக்ஸும் ஆடவில்லை. முதல் போட்டியில் ஆடியதுடன், காயத்தால் இந்த தொடரிலிருந்தே விலகினார் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட். இந்நிலையில், 2வது டெஸ்ட்டில் பிராடுக்கு பதிலாக ஆடி நன்றாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்க் உட்டுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர் 3வது டெஸ்ட்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2வது டெஸ்ட்டில் மார்க் வூட் அபாரமாக ஆடினார். அவர் 3வது டெஸ்ட்டில் ஆடாதது இங்கிலாந்து அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும்.

Leave A Reply

Your email address will not be published.