இலங்கையில் இடம்பெறவிருந்த தொடர் திடீரென பிற்போடப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி அவர்கள் ESPNcricinfo விற்கு இந்தத் தொடரை பாகிஸ்தானுக்கு மாற்ற முயற்சித்ததை உறுதிப்படுத்தினார், ஆனால் இறுதியில் ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தொடரை ஒத்திவைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால்் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், கொரோனா அச்ச நிலமைகளுமே இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.