இந்திய விமானப் படை விமானம் மூலம் 24 இந்தியர்கள் காபூலிலிருந்து தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவிப்பு

ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து 24 இந்தியர்கள், நேபாளத்தைச் சேர்ந்த 11 பேர் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அந்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள சொந்த குடிமக்களை திரும்ப அழைத்து வருகின்றனர். இந்தியாவும் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது 24 இந்தியர்கள், நேபாள நாட்டைச் சேர்ந்த 11 பேர் என மொத்தம் 35 பேர் இந்திய விமானப் படை விமானம் மூலம் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மேலும் 180 பேர் வரை வியாழக்கிழமை இந்தியா அழைத்து வரப்படுவதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.