இந்திய அணியை வீழ்த்தியதற்கு பந்து வீச்சாளர்கள் தான் காரணம்.

இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் பேசியதாவது;

இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் தான் முக்கிய காரணம். எங்களால் இது போன்று விளையாட முடியும் என்பது எங்களுக்கே தெரியும். இது போன்று வெற்றியை பெறும் அளவிற்கு எங்களிடம் திறமை உள்ளதும் எங்களுக்கு தெரியும். பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டனர், குறிப்பாக துவக்க வீரர்கள் இருவரும் மிக சிறப்பாக செயல்பட்டு நல்ல துவக்கம் கொடுத்தனர். ஆண்டர்சன் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். டேவிட் மாலனும் மிக சிறப்பாக செயல்பட்டார்.

ஒரு அணியின் கேப்டனாக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள அடுத்த போட்டியில் இதே போன்று விளையாட முயற்சிப்போம். ஓலி ராபின்சனை பாராட்டியே ஆக வேண்டும், புதிய பந்தில் மட்டுமல்லாமல் இந்த போட்டி முழுவதும் மிக சிறப்பாக பந்துவீசினார். அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் என்று தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.