அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியில் இதுவரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை இன்றைய தினம் (06) இராணுவத்தினர் முன்னெடுத்தனர்.

இராணுவத்தின் 231வது படைப்பிரிவும் இராணுவத்தின் மருத்துவ பிரிவும் இணைந்து இன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இன்றைய தினம் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இராணுவத்தினர் ஏற்றினர்.

பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் இதுவரையில் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிராம சேவையாளர்கள் ஊடாக இனங்காணப்பட்டு இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் பெருமளவான தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய முதலாவது தடுப்பூசினைப் பெற்றுக்கொண்டதை காணமுடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.