அத்தியாவசியப் பொருட்களின் விலைதொடர்பான கள ஆய்வு.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கொக்குவில், இணுவில், மருதனார்மடம், சுன்னாகம், பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தகநிலையங்கள் பரிசோதிக்கப்பட்டது.

மேலும், அதிவிஷேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைதொடர்பான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது சட்டநடவடிக்கையெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.