உயிரிழந்த ஊடகவியலாளருக்கு வவுனியாவில் அஞ்சலி!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த யாழ். சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸுக்கு வவுனியாவில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில்,அவரது திருவுருவப் படத்துக்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அவர் தொடர்பான நினைவுரையை வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் நிகழ்த்தினார்.

Leave A Reply

Your email address will not be published.