பொலிஸ் நிலையத்திலிருந்து கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!

கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் புதிதாக இணைந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம், பொலிஸ் நிலையத்தின் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரியவருகின்றது.

அவர் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி பொலிஸ் பயிற்சிச் கல்லூரியில் தனது பயிற்சியை நிறைவுசெய்துள்ளதுடன் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.