கொரோனாவை ஒழிக்க தன்னால் முடியும் என சொன்ன ரோயல் வைத்தியருக்கும் கொரோனா!

இலங்கையில் மாத்திரமன்றி இந்தியாவிலும் கொரோனா ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ரோயல் வைத்தியர் என அழைக்கப்படும் ஏலியன்த வைட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏலியன்த கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா முதலாவது அலை இலங்கையில் ஏற்பட்ட போதும் தனது பிரமாண்ட சக்தியை பயன்படுத்தி பலரை குணப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

ஆற்றில் பானை வீசினால் கொரோனா குறையும் என கண்டுபிடித்த முதலாவது வைத்தியர் இவராவார்.

எனவே கொரோனா ஒழிக்க இந்தியாவில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ஏலியன்த வைட் கூறி வந்தார்.

Leave A Reply

Your email address will not be published.