தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 733 பேர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் 773 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 467 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில் மேலும் 124 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.