பெங்களூர் அணியை வீழ்த்தியதற்கு இவர்கள் தான் காரணம்; இயன் மோர்கன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்தநிலையில், பெங்களூர் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன், பந்துவீச்சாளர்களை பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து இயன் மோர்கன் பேசியதாவது, “வெற்றியுடன் இந்த தொடரை துவங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் அணியில் அதிக திறமை கொண்ட வீரர்கள் பலர் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிக மிக சிறப்பாக செயல்பட்டனர்.

பெங்களூர் அணியின் மேக்ஸ்வெல், கோலி, டிவில்லியர்ஸ் என அனைத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் விரைவாக வீழ்த்துவது எளிதான காரியம் கிடையாது. இன்னும் அதிகமான விசயங்கள் செய்ய வேண்டியுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளிலும் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.