நீக்கப்பட்ட அரிசியின் சில்லரை விலை! வெளிவந்த புதிய அறிவிப்பு

அரிசிக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

அதன் பிரகாரம் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இந்த புதிய விலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாவாகவும் மற்றும் கீரி சம்பா ஒரு கிலோ 165 ரூபாவாகவும் விலையிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.