கொரோனாத் தொற்றால் மேலும் 59 பேர் மரணம்!

இலங்கையில் மேலும் 59 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 59 பேரில் 28 ஆண்களும், 31 பெண்களும் அடங்குகின்றனர்.

இதில் பெண் ஒருவர் 30 வயதுக்குட்பட்டவர். 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 47 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 20 ஆண்களும், 27 பெண்களும் அடங்குகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.