குருபரனின் பதவிவிலகல் கோரிக்கையை மீளப்பெறுமாறு கோரவுள்ள பேரவை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் குமரவடிவேல் குருபரன் சமர்ப்பித்த பதவி விலகல் கோரிக்கையை சீராய்ந்து மீளப்பெறுமாறு கோருவது என பல்கலைக்கழக பேரவை தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் இந்தத் தீர்மானம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, கலாநிதி குருபரனுக்கு கடிதம் மூலம் அடுத்தவாரம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் நேற்று பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கடந்த 17ம் திகதி பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கலைப்பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பிவைத்திருந்தார்.

தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடைசெய்துள்ளமையை காரணாமாகக் காட்டியிருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் குருபரன் சமர்ப்பித்த பதவி விலகல் கோரிக்கை கடிதம் தகுதி வாய்ந்த அதிகாரியால் இன்று பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

அதன்போது, சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் குருபரன் தனது பதவி விலகல் தொடர்பான தீர்மானத்தை சீராய்ந்து தனது கோரிக்கையை மீளப்பெறுமாறு கோருவது என்று பேரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.