மாற்றத்திற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் – அநுரகுமார திசாநாயக்க

எதிர்கால சந்ததியினரின் உரிமைகளுக்காக நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கெஸ்பேவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு அழைத்து விடுத்துள்ளார்.

தோல்யிடைந்த கல்விமுறையினால் மாணவர்களின் சிறுவர் பராயம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அநுரகுமார இதனை கட்டியெழுப்புவதற்காக நலன்களை மேம்படுத்துவதற்கு தாமும் தமது தரப்பினரும் முழுமையாக அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிணைமுறி மோசடி கயிற்றினால் கட்டப்பட்டப்பட்டுள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தயின் தலைவர் கலாசார நிதியத்தில் நிதி இடம்பெற்றுள்ளதாக கூறும் கயிற்றில் கட்டப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Comments are closed.