நல்லிதயம் கொண்ட ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் – சஜித் பிரேமதாச

பொதுமக்களுக்கான அரசாங்கமொன்றை அமைத்து நாட்டிலும் சமூகத்திலும் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கண்டி தேர்தல் தொகுதியிலுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து தான் அறிந்திருப்பதுடன் மக்களுக்கான காணி உறுதிப்பத்திர மற்றும் வீட்டுப்பிரச்சினை குறித்து அதிக கவனம் செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் பிரச்சினைககளை இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் தீர்த்து பொதுமக்களுக்கான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நல்லிதயம் கொண்ட ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் அதேவேளை நாட்டு மக்களை பாதுகாக்கக்கூடிய நாட்டிற்காக வேலை செய்யும் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய பொதுமக்களின் யுகத்தை உருவாக்க உள்ளதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Comments are closed.