சிகாகோ ஓபன் டென்னிஸ் ஸ்பெயினின் முகுருசா சாம்பியன்.

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், உலகின் 2ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா, 6ம் நிலை வீராங்கனையான ஆன்ஸ் ஜெபருடன் நேற்று மோதினார்.

இதில் முதல் செட்டை 6-3 என ஜெபர் கைப்பற்றினார். 2வது செட்டில் சிறப்பாக ஆடிய முகுருசா 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் அதிரடி காட்டிய முகுருசா 6-0 என தன்வசப்படுத்தினார்.

முடிவில் 3-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில், ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிக், செக்குடியரசின் கேவேடா பெஷ்கே ஜோடி 6-3, 6-1 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் கோகோ வந்தவேகே, கரோலின் டோல்ஹைட் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

Leave A Reply

Your email address will not be published.