கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான விமான சேவை ஆரம்பம்.

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி சுகாதார வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.