மாத்தளை மாவட்டத்தில் 670 வீதிகள் அமைக்க முடிவு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்திற்கு அமைவாக 100,000 கி.மீ நீள வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பாலபத்வல – கலேவெல (பி -346) வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் பணி ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

30.75 கிலோ மீட்டர் நீள பாலபத்வல – கலேவெல (பி – 346) வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 12 மாதங்களுக்குள் ரூ. 3,552 மில்லியன் செலவில் இத்திட்டம் நிறைவு செய்யப்படும். வீதிஅபிவிருத்தி அதிகார சபையின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த வீதி விஸ்த்தரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.