ஆசிரியர் வேலை நிறுத்தம் முடிவடையவில்லை – ஜோசப் ஸ்டாலின்! (காணொளி)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று பிற்பகல் அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டனர்.

அதன் பின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்க பிரதிநிதிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரோஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆசிரியர்கள் சங்கங்கள் தங்கள் சம்பள பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதைப் பற்றி நாளை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூடி விவாதிப்பார்கள் என்று தெரிவித்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலிங் வேலைநிறுத்தம் முடிவடையவில்லை என்றும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் கூட்டணி நாளை கூடி இந்த விஷயத்தை முறையாக விளக்குவதாகவும் கூறினார்.

இன்று விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து நீண்ட விவாதத்திற்குப் பிறகு நாளை தொழிற்சங்க நடவடிக்கையின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.