பல பாடசாலைகளில் கொரோனா பரவல்! ஆசிரியர் சேவை சங்கம் குற்றச்சாட்டு.

நாட்டில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பித்த பல பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று உருவாகியுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஆரம்பப் பாடசாலை மாணவர்களில் பலருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது எனச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்னும் 6 முதல் 13 வரையிலான வகுப்புகளுக்குக் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான பரிந்துரைகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சில பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அழைக்கவுள்ளனர் என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளது எனவும், இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை அதிபர்கள், ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.