யாழில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட செயலர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்று பார்வையிட்டார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும் நிலையிலேயே பல பகுதிகள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கல்லுண்டாய், நாவாந்துறை, அச்சுவேலி போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்த மாவட்ட செயலர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

Leave A Reply

Your email address will not be published.