குழந்தைகள் 11 பேர் உட்பட 51 பேருக்கு கொரோனா!

5 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பராமரிக்கும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் குழந்தைகள் 11 பேர் உட்பட 51 பேர் கொவிட் தொற்றாளர்களாக இன்று அடையாளம் காணப்பட்டனர்.

அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடனடி அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பண்டாரவெல சுஜாதா செவன குழந்தைகள் காப்பகத்தில் இந்த கொவிட் அவதான நிலை ஏற்பட்டுள்ளது.

பண்டாரவெல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று இந்த உடனடி அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 11 குழந்தைகளுக்கு மேலதிகமாக 6 பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள், உணவகத்தில் பணி புரியும் இருவர் மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் உள்ளிட்ட தரப்பினரே இவ்வாறு கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.p

Leave A Reply

Your email address will not be published.