அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும் அக்குறணை.

அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும் அக்குறணை நகரை குறுகிய நீண்ட கால வேலைத் திட்டத்தின் மூலம் தடுக்க நடவடிக்கை

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்களின் விசேட பணிப்புரையின் கீழ் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும் அக்குறணை நகரை குறுகிய நீண்ட கால திட்டத்தின் மூலம் தடுப்பதற்கான வேலைத் திட்டம் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக அடிக்கடி வெள்ளத்திற்கு மூழ்கி வரும் அக்குறணை நகருக்கு எதிர் வரும் காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்களின் விசேட பணிப்புரையின் கீழ் குடுகல பாலத்தை 3 கோடி செலவில் புனர்நிர்மாணம் செய்வதற்கான மதிப்பீட்டு வேலைத் திட்டம் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் மத்திய மாகாண பொறியியல் திணைக்களத்தின் அதிகாரிகள் அக்குறணை பிரதேச பிரதேச செயலாளர் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.