ஹோட்டலில் ஆணின் சடலம்! கொலையா? தற்கொலையா?

ஹோட்டலொன்றின் அறைக்குள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராமக்கெலே, வலவிவத்த பிரதேசத்திலுள்ள ஹோட்டலில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என அநுராதபுரம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

திஸ்வெல்ல, கிரிந்திவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.