இந்திய கடற்படை தளபதியாக ஹரிகுமார் பதவியேற்பு

இந்திய கடற்படை தளபதியாக ஹரிகுமார் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுறுவதை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

தில்லியில் உள்ள தெற்கு பிளாக்கில் நடந்த விழாவில் இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஹரிகுமார் பொறுப்பேற்றார். அவரை கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.