கள விஜயத்தினூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி வருகை.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று காலை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விஜயமானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாட்டை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், புதிய மாவட்ட செயலக கட்டடத்திற்கு செல்லும்போது புத்தாக்க செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலான கள அனுபவப் பகிர்வுகளை பெறுவதனை நோக்கமாக கொண்டிருந்தது.

அத்துடன் குறித்த குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் நினைவுப்பரிசிலினையும் வழங்கியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.