வவுனியா மாவட்ட சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்.

வவுனியா பிரதேச செயலகம் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து நடாத்திய சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்.

இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா பிரதேச செயலாளர் திரு.நா.கமலதாசன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திரு.P.A.சரத்சந்திர அவர்களும் விருந்தினர்களாக வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையின் சிரேஸ்ட உளநல வைத்தியர் Dr.சி.சுதாகரன் மற்றும் வவுனியா நீதிமன்ற வளாகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி க.தயாபரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததனர்.

VAROD நிறுவன மாணவர்களினால் வரவேற்பு நடனம் மற்றும் குழு நடனமும், SEED, ROOD, DDASL ஆகிய நிறுவன மாணவர்களினால் நாடகமும், ஓஹான் நிறுவன மாணவர்களினால் குழு நடனமும் ஆற்றுகை செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.