வவுனியாவில் இருந்து சென்ற மூவர் முல்லைத்தீவு கடலில் மாயம்.

முல்லைத்தீவு, மணல்குடியிருப்புக் கடலில் மூன்று இளைஞர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனையோரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இந்தச் சம்பவம் இன்று மாலை நடந்துள்ளது. கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்களும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

வவுனியா மதகுவைத்தகுளத்தைச் சேர்ந்த 27 வயதான மனோகரன் தனுஷன், வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த 26 வயதுடைய விஜயகுமார் தர்சன், வவுனியா மதகுவைத்தகுளத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சிவலிங்கம் சகிலன் ஆகிய மூவருமே கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டனர்.

கடற்படையினரும், மீனவர்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.