மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு.

அகில இலங்கை வை.எம்.எம். ஏ பேரவையின் தேசிய தலைவர் சஹித் எம் ரிஸ்வி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் கம்பளை வை.எம்.எம் ஏ யின் தலைவர் இஹ்திஸான் முஹம்மட் அவர்களின் தலைமையின் கீழ் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு.

கம்பளை உடப்பலாத்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் 2500 ரூபாய் பெறுமதியான 100பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு உடப்பலாத்த பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் திசானாயக்க அவர்களும் கலந்து கொண்டு வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.