ஒருநாள் தொடரின் கேப்டன் பொறுப்பு மாற்றப்பட்டது ஏன்? கங்குலி விளக்கம்.

இந்திய ஒருநாள் தொடரின் கேப்டன் பொறுப்பு ரோகித்துக்கு கொடுக்கப்பட்டது குறித்து கங்குலி விளக்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வகை போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் . சமீபத்தில் விராட் கோலி டி20 பதவியிலிருந்து விலகிய நிலையில் இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக இந்திய கிரிக்கெட் நியமித்துள்ளது. ரோகித் சர்மா ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக தனது பணியை தொடர்வார்.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, “ரோகித் சர்மாவை ஒருநாள் தொடரின் கேப்டனாக்குவதற்கு அணி தேர்வாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவு குறித்து விராட் கோலியிடமும் பேசப்பட்டது.

உன்மையில் இந்திய கிரிக்கெட் வாரியம், கோலியிடம் இருபது ஓவர் போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் இருபது ஓவர் போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், இரண்டு வெள்ளை-பந்து வடிவங்களுக்கு இரண்டு கேப்டன்களை வைத்திருப்பது சரியானதாக இருக்காது என அணி தேர்வர்கள் கருதினர். எனவே ஒருநாள் தொடரிலும் ரோகித்தை ஒருநாள் தொடரின் கேப்டனாக்க முடிவு செய்யப்பட்டது.

“ரோகித் சர்மாவின் தலைமைத் திறன்களில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, மேலும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக நீடிப்பார். இந்திய கிரிக்கெட் சிறந்த வீரர்களின் கைகளில் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். வெள்ளைப்பந்து வடிவத்தில் கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்புக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்,” இவ்வாறு பிசிசிஐ தலைவர் கங்குலி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.