இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு , அமெரிக்காவுக்குள் நுழைய தடை

இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் 11 பேரைக் கடத்திச் சென்று 8 தமிழர்களைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் சுனில் ரத்நாயக்க ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருவரும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

மேலும், பல நாடுகளில் உள்ள சிலருக்கும் , அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.