பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுதல்….

இருதரப்பினருக்குமிடையேயான உயர்கல்வி ஒத்துழைப்புக்காக உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஹொக்கயிடோ பன்கியோ பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

ஐந்து (05) வருடங்கள் மேற்கொள்ளப்படும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பீடங்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஏனைய ஆய்வு மற்றும் நிர்வாகப் பணியாளர் குழாம் பரிமாற்றல், மாணவர் பரிமாற்றல் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், இருதரப்பினர்களுக்கிடையே ஒன்றிணைந்த ஆய்வுகளை மேம்படுத்தல், கல்வி ரீதியான தகவல்கள் மற்றும் பொருட்களைப் பரிமாற்றிக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.