கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறைக்கு புதிய ரயில்….

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எஸ்13 இயந்திரத்தைக் கொண்ட இந்த ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

23 ஆம் திகதி மருதானையில் இருந்து ரம்புக்கணை நோக்கி 550 பயணிகளுடன் இந்த ரயில் சென்றது.

550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த ரயில் போக்குவரத்து பரிசோதனைக்காக மருதானை புகையிரத நிலையத்திலிருந்து ரம்புக்கணை புகையிரத நிலையம் வரை பயணித்துள்ளது.

இந்த ரயிலின் சில பெட்டிகள் குளிரூட்டப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.