இலங்கையில் கருத்துக்கணிப்பை நடத்திய சீனா? சஜித் பிரேமதாசவை சந்தித்து நன்கொடையை வழங்கியுள்ளது

இலங்கைக்கு வந்துள்ள சீன அரச பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை தீவு முழுவதையும் உள்ளடக்கி இரகசியமாக கணக்கெடுப்பொன்றை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தக் குழுவினர், இலங்கை தொடர்பில் சீன அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள், நாட்டில் இதுவரையில் சீனா மேற்கொண்டுள்ள ராஜபக்சவுக்கு ஆதரவான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக இலங்கையில் சீனா எத்தகைய தவறுகளை செய்துள்ளது, அதனை எவ்வாறு திருத்திக் கொள்ள முடியும் என்ற தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள், பின்னர் பீஜிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் , அதனை ஆய்வு செய்த சீன அரசாங்கம் ராஜபக்சக்களுக்கு சாதகமான திட்டத்திலிருந்து திசையை மாற்றி வேறோர் திசையில் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இதன் ஒரு அங்கமாகத்தான் அண்மையில் சீன தூதுவர் , எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து, சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான பரிசோதனைக்கு அத்தியாவசியமான சிறு நீரக டயலிசிஸ் (Kidney Dialysis Machine) இயந்திரத்திற்காக சீன அரசாங்கம் நூற்று தொண்ணூற்று ஆறு இலட்சம் ரூபா பெருமதியான நன்கொடையை வழங்கியுள்ளாரா எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.