நாம் உருவாக்கிய அரசிலிருந்து ஏன் விலகிச் செல்ல வேண்டும்?

நாங்கள் உருவாக்கிய அரசிலிருந்து நாங்கள் ஏன் விலகிச் செல்ல வேண்டும் என்று நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசிலிருந்து விலகிச் செல்லும் எந்த எண்ணமும் எமக்கு இல்லை.

நுகேகொடையில் இருந்து மஹிந்த காற்று வீசிய நாள் முதல் மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் இறுதிப் பலனாக இந்த அரசு உருவாக்கப்பட்டது.

ஜனாதிபதியுடன் முன்னோக்கிச் செல்வதே ஒரே நம்பிக்கை.

ஆனால், நாட்டுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அது குறித்து கேள்வி எழுப்பப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.