சிறைக் கைதிக்கு கொண்டுவரப்பட்ட உணவுப் பொதிக்குள் ஹெரோயின்!

சிறைச்சாலைக் கைதிக்குக் கொண்டுவரப்பட்ட உணவுப் பொதிக்குள் இருந்து 4 பைக்கற் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

காலி சிறைச்சாலையில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஒருவருக்கு, அவரின் உறவினர் ஒருவரால் சோறு பார்சல் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதனை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டபோது, உணவு பொதிக்குள் 4 பைக்கற் போதைப்பொருள் இருந்துள்ளது. அது ஹெரோயின் போதைப்பொருளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி சிறைச்சாலை அதிகாரிகளும், பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.