கியூவை உடனே நிறுத்து! வியத் மக சரிவராது! கோட்டாவுக்கு அரசியல் பாடம் கற்பித்த மஹிந்த!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த வார இறுதியில் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அப்போது நாட்டில் தற்போது நிலவும் கியூ கலாசாரத்தை பிரதமர் விமர்சித்துள்ளதாக தெரியவருகிறது.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் 70-77 ஆட்சிக்காலத்தில் நிலவிய வரிசை கலாச்சாரமே அந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமானது என பிரதமர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வித்மக (கல்விமான்களின் வழி) அமைப்பின் தலைவர்கள் தோல்வியடைந்துள்ளதாகவும், அரசியல்வாதிகள் தொடர்பில் அலட்சியம் காட்டுவதால் பாரிய நெருக்கடிகள் பல ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

இதன்போது பிரதமர் தெரிவித்த கருத்துக்களை ஜனாதிபதி உன்னிப்பாகக் கேட்டறிந்ததாகவும், பிரதமர் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாகவும் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.