டிக்டாக் தகராறு -17 வயது சிறுவன் கொலை.

டிக் டொக் காணொளி தொடர்பான தகராறு காரணமாக வெல்லம்பிட்டிய பகுதியில் 17 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி ,கொழும்பு – கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
டிக்டொக் காணொளியால் ஏற்பட்ட தகராறையடுத்து, குறித்த சிறுவன் மேலும் இருவருடன் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு குழு அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இதன்போதே, சந்தேகநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும் அதன்பின்னர், படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அந்நிலையில் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.