யாழில் திங்களன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 48ஆவது நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக யாழ்ப்பாணம், முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்படுவது வழமை.

இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொண்டு அஞ்சலியைச் செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின்போது வன்முறைக் கும்பலொன்றால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.