புதுமாத்தளன் கடற்கரையில் புதையுண்ட நிலையில் உழவு இயந்திரம்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் கடற்கரையில் உழவு இயந்திரம் ஒன்று புதையுண்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புதுமாத்தளன் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று முழுமையாக புதையுண்ட நிலையில் தற்போது கடல் அரிப்புக் காரணமாக வெளித் தெரிகின்றது.

இந்த உழவு இயந்திரம் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பு இப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வெளித் தெரியும் உழவு இயந்திரத்தை மீட்க இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.