தேவாலயத்தில் குண்டு வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் கைது!

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் வெடிகுண்டு போன்ற வடிவிலான கைக்குண்டை வைத்திருந்த பிரதான சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய, பனமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெடிகுண்டு வைப்பதற்கு பணம் பெற்றதாக கைதான நபர் தெரிவித்ததாக , உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

பணத்தை வழங்கிய நபரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.