ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும். : டயனா கமகே (Video)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் காரணமாக ஜனாதிபதி இரண்டு வருட பதவியை இழந்தார், எனவே அவர் அந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜனாதிபதி தகுதியானவர் என தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தனது பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

மேலும், கொரோனாவால் இழந்த இரண்டாண்டு பதவிக் காலத்தை தற்போதைய நாடாளுமன்றக் காலத்திலிருந்தும் நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இதனைத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.