கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திராதேவி புகையிரத்துடன் மோதுண்டு மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தைச் சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகில் புகையிரத பாதையினை கடந்த வேளை, யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளான்.

நாளைய தினம் பாடசாலையில் நடைபெறும் (சோர்சல்) நிகழ்வுக்கு ஆடைகளை தைக்கச் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பாடசாலைச் சமூகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளதுடன், விபத்துக் குறித்து மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.