பிஸ்கெட்களை தரையில் வீசி இளைஞரை உதைத்து சாப்பிட வைத்த கும்பல் – பகீர் காரணம்!!

பிஸ்கெட்களை தரையில் வீசி இளைஞர் ஒருவரை சாப்பிட வைத்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில் இரண்டு மைனர் சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அண்ணா என அழைக்காமல், பெயரை சொல்லி அழைத்ததால் வெறிச்செயல்..

நேற்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஈர்த்தது, அந்த வீடியோவில், இளைஞர் ஒருவரை சிலர் பெல்ட்டால் அடிக்கும்போது, அவர்களுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து கொண்டு அந்த இளைஞரை தாக்குகின்றனர். பின்னர் அவர்கள் சாலையில் பிஸ்கெட்களை வீசி, அந்த இளைஞரை அடித்து அவற்றை சாப்பிட வைத்தனர்.

இந்த வீடியோ மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்திருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதில் தொடர்புடையவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது இந்த சம்பவத்துக்கான காரணம் அறிந்து போலீசார் அதிர்ந்தனர். புனேவை அடுத்த பிம்பிரி சின்வாத் தொழிற்பேட்டை பகுதியில், இச்சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களுள் ஒருவரை, பாதிக்கப்பட்ட இளைஞர் ‘பாய்’ (அண்ணன்) என அழைக்காமல், பெயர் கூறி அழைத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், முதலில் அந்த இளைஞரை தாக்க தொடங்கியுள்ளார். பின்னர், மற்றவர்களும் அவருடன் சேர்ந்து தாக்கத் தொடங்கியிருக்கின்றனர். பெல்ட்டால் அடித்தும், தரையில் பிஸ்கெட்களை வீசி, அந்த இளைஞரை அடித்து, பிஸ்கெட்களை சாப்பிட வைத்திருக்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த 20 வயது இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.