பிரபல ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸ் காலமானார்!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2022/02/FB_IMG_1643950082099.jpg)
பேருவளை மருதானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமிழ்ச் சேவையின் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கட்டுப்பாட்டாளர் பதவி வரை வகித்தவர். இறுதிக் காலத்தில் முஸ்லிம் சேவையின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.
அதன்படி ,இலங்கை ரூபவாஹினியில் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். சிறந்த செய்தி அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருதை இரண்டு முறை வென்றவர். பல்வேறு நாடகங்களிலும் பங்கு கொண்டு கலைத் துறையிலும் பிரகாசித்தவர்.
இதற்கமைய ,அண்மைக் காலமாகத் திடீர்ச் சுகவீனம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார்.