கண்களை கட்டியபடி பாஜக வேட்பாளர் நூதன தேர்தல் பிரச்சாரம்!!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்து வாக்காளர்களை கவர்ந்துள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கண்களைக் கட்டிக்கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார். கண்களை கட்டியதால் தள்ளாடியபடி சென்ற வேட்பாளரை கட்சி நிர்வாகிகள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இன்னும் 13 தினங்களே தேர்தலுக்கு எஞ்சியுள்ளதால் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கண்களை கட்டிக் கொண்டு ஒவ்வொரு வாக்காளர்களின் இல்லத்திற்குச் சென்று தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்த்த பிறகுதான் வாக்காளர்களின் முகத்தை பார்பேன் என்றும் அதனால்தான் கண்களை கட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி நூதன முறையில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கண்களை கட்டிக் கொண்டு சாலையில் தள்ளாடியபடி நடந்து சென்ற வேட்பாளரை பாஜக கட்சி நிர்வாகிகள் கைத்தாங்கலாக ஒவ்வொரு இல்லத்திற்கும் அழைத்துச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது வாக்காளர்களை கவர்ந்து.

Leave A Reply

Your email address will not be published.