கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் மரணம்.

நுவரெலியா, நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகே பிரதேசத்தில், கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் நேற்று மரணமடைந்தார்.

இவ்வாறு மரணமடைந்தவரின் பெயர், விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.